வள்ளி

கல்யாண வீட்டில்

அதிக வேலையை

வலிந்து சென்று

செய்தவனை ஏனோ

நொடிப்பொழுதில் 

சிலருக்காக சிலரின் 

மனதை சந்தோஷப்படுத்த

நினைத்த அற்பமான

சில்லறை சொந்தங்கள்...

அவனை வார்த்தைகளில்

வறுத்தெடுத்து கோபத்தின்

உச்சிக்கு அழைத்த 

உடன்பிறவா உறவுகள்...

பீரங்கி குண்டு போல்

உணர்ச்சியின் வேகத்தில்

வார்த்தைகளை வீசி

தனது எல்லா நல்ல செயல்களையும்

பின்னுக்கு தள்ளிவிடும்...

போலியாய் பாசாங்கு

தெரியாத அப்பாவி ஏழை....

இன்றும் கூட அப்படித்தான்

ஆனால் அருகிலே தேவதை...

கோபத்தில் பேச நினைத்தவனை

தனது மலர் கரத்தால்..

தீண்டினாள்.....

சேலையின் முந்தானை 

மறைவில் விரல்களால்

வருடி கண்களில் பேசினாள்

உன்னை நான் அறிவேன்

ஊரின் கேலி பேச்சுக்கள்

நமக்கு எதற்காக...

உதட்டின் புன்னகையில்...

சண்டையை தவிர்த்து விட்டாள்....

சமாதானத்தை மாத்திரமே

வேண்டுகின்ற யதார்த்தவாதி

சேவலின் சண்டை எதிர்பார்த்த...

உறவுகளுக்கு முன்னால்....

அவனை தலை நிமிரச்செய்து

அவனின் குணத்தை

பலர் புகழ வழிசெய்தாள்....

வேலனின் கரம் பிடித்த

வள்ளி....





No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...