பத்து மாதம்
சுமந்து பெறவில்லை
குடும்பத்தின் கவலைகள்
புரியாத வயது....
பாவாடை தாவணியில்
ஆனாலும் அக்காவின்
குழந்தையை இடையில்
தூக்கி வைத்துக் கொண்டு
வீதியை சுற்றிக்காட்டுவாள்
சிறிதாக சிணுங்கினாலும்
தாய்மையின் வேதனையில்
தவித்து போவாள்...
என் புள்ள கர்வமாக சொல்லுவாள்
ஆசையும் ஆசிர்வாதமும் கலந்தே
ஊட்டிய நிலாச்சோறு...
அம்மாவின் மறுஉருவம்...
அன்பான சித்தி...
No comments:
Post a Comment