கோபத்தில் அவன் ஆசையாய் வாங்கிய விலையுயர்ந்த பட்டு புடவையுடன் தரையில் படுத்து கொண்டு விம்மி அழுதாள்...
இப்படி ஓர் நிகழ்வு ஏற்படும் என்று கனவிலும் அவன் நினைக்கவில்லை...
ஏய் புள்ள...
பதில் எதுவும் சொல்லாமல் வலது கையை தலைக்கு வைத்து தரையில் முகம்படும் படியாக இருந்தாள்...
எரிச்சலாக வந்தது.. இந்த பெண்ணை புரிந்து கொள்ளவதிலேயே பாதி வாழ்க்கை போய்விடுமோ...
இவள் தானே காலையில் கேலி பேச்சை தொடங்கினாள்....
இந்த சட்டை நல்லா இருக்கா என்றபோது.. உங்க அண்ணன் சட்டை மாதிரி இருக்கு என்றாளே....
அப்படித்தானே நானும் சொன்னேன்... எப்படி இது மட்டும் தப்பாகும்...
மிகவும் சங்கடமாக உணர்ந்தான்.. திருமணத்திற்கு பிறகு வரும் அவளின் முதல் பிறந்தநாள்..ஆறு மாதமாக போட்ட திட்டம்... ஓர் சிறிய கேலி வார்த்தைகளில் திணறி நின்றது... அவள் தான் முதலில் கேட்டாள்.. இந்த புடவையில் நான் அழகா இருக்கேனா....ம்ம்.என்றவனிடம்...என் தங்கையை விடவா என்ற கேள்வியின் விஷமம் தெரியாமல்.. அவளுக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும் என்ற வார்த்தையின் விளைவு... பேசிய பிறகு தானே தவறு தெரிகிறது...
அவள் இன்று அணிந்திருக்கும் ஒவ்வொன்றும் எத்தனை விலை உயர்ந்த பொருட்கள்.. தன் அரை மாத சம்பளம், அது கூட பரவாயில்லை... எத்தனை கடை ஏறி இறங்கி வாங்கியவை இவை.....
அவளுக்கே தெரியாமல் அவளுக்கு பிடித்த கலர் பிராண்ட்.. மாம்பழ கலர் பட்டு புடவை... வண்ணமயமாக ஸ்டிக்கர் பொட்டு... மல்லிகையும் பிச்சியும் ஓரு சேர கட்டிய பூ சரம்
அவளின் பேச்சு அவனை நிலைகுலைய வைத்தது
அப்போ அவளையே நீ கட்டியிருக்க வேண்டி தானே.. எதுக்கு என் பின்னால் சுத்துனே...
( தொடரும் )
No comments:
Post a Comment