கடற்கரையில்
கால் நனைக்க
பயந்து ஓடும்
பெரிய மணுஷி..
ஐந்து வயது
தம்பியின் கைகளை
பிடித்துக்கொண்டு
வலுக்கட்டாயமாக அவனை
கடலுக்குள் இழுத்தாள்....
அவனோ பயத்தில் கத்தினான்...
அக்கா இருக்கேன்.....
கவலைபடாதே....
தூரத்தில் இருந்து
சகோதர பாசத்தை
ரசிக்கும் பெற்றவர்கள்....
அனாதையாக உலகை
வெறுத்து சுற்றியவனை
இருந்தவனை
இப்படித்தானேடி கண்களால்
வலைவீசி கவலை துடைத்து
காதலுக்குள் இழுத்தாய்...என்றவனின்
தோள்களில் சாய்ந்தாள்...
அவனின் காதல் மனைவி...
No comments:
Post a Comment