மகாலட்சுமி பிறந்திருக்கா..


நேற்று வரை

குடிகாரனாக

தெருவில்

அலைந்தவன்..

பொண்டாட்டி

ஆபிஸ்பத்திரியில்

சேர்ந்தது கூட

நினைவுயின்றி....

மதுபோதையில்

அந்த அரசமர

விநாயகரிடமும்

புலம்பித் தள்ளினான்

என்னை யாருமே

புரிஞ்சுக்கலை

அதனால தானே

குடிக்கிறேன்....

அருகில் ஓடிவந்த

அக்காவின் மொழி

காதில் விழுந்தது

ஏறிட்டு பார்த்தான்

ஏலே உனக்கு

பொம்பள பிள்ளை

பிறந்திருக்கு....

தட்டுத்தடுமாறி

தள்ளாடியபடி

நடந்து சென்ற

குடிகார இளைஞன்...

கட்டிலில் மனைவி

வெட்கப் புன்னகையுடன்

இங்க வாய்யா....

உன் புள்ளயும்

உன்னை போலவே

கைநடுக்கத்துடன்

அருகே சென்றவனை

பார்த்து சிரித்தாள் அந்த

சின்னச்சிறு தேவதை....

இனிமேல் சத்தியமா

குடிக்க மாட்டேன் 

"பாப்பா" கண்கலங்கி

இருகரம் கூப்பி

குழந்தையை 

வணங்கினான்....

பக்கத்து வார்டில்

கிழவி பேச்சு

சுத்தமாக கேட்டது

அந்த குடிகாரப்பயலுக்கு

மகாலட்சுமி பிறந்திருக்கு...

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...