கண் பாராயோ தாயே

கடைக்கண் பாராயோ..

கவலைகள் தீராயோ...

கனியமுது தந்திடவே

விரைந்து நீ வாராயோ...

வெற்றியை தந்திடவே

கவலைகள் அத்தனையும்

சிரித்து மாற்றிய சிங்காரியே

மாயக்கூத்தனையும்

மயக்கிடும் மோகினியே

உனதழகு மாயைகளை காட்டி

மர்மமாய் சிரிப்பதென்ன

சிற்றின்ப வெள்ளத்தில்

திளைக்க விடுவதென்ன....

உன்னை மட்டுமே சதமாய்

நினைத்தவனுக்கு...

சொந்தமும் பந்தமும்

சொகுசு வசதியும் 

தந்து விட்டு அமைதியாய்

இருப்பதென்ன...

விரைந்து நீ வா தாயே...

உன் அருளாலே கனிவுடனே

கனியமுது தந்திடவே

விரைந்து நீ வா தாயே..

என்னை கண் பாராயோ....

குறிப்பு -

அம்பாள் கோவிலில் பாடும் படி எழுதப்பட்ட பாடல்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...