வயதான
காலத்தில்
மரணத்தின்
தருவாயில்
படுக்கையில்
விழுந்த பிறகும்
ஏனோ முதன்முதலாக
மனதில் பூவாய்
பூத்த காதலை
மறக்க முடியவில்லை...
சுற்றி நின்று அழும்
மனைவி மக்கள்...
ஆயினும் மனமோ
தேடுகிறது அந்த
அத்தை மகளை...
அவளோ தள்ளாடி
நடக்கமுடியாமல்
பேத்தியின் கைபிடித்து
ஆஸ்பத்திரிக்கு
நடந்து வருகிறாள்...
இருவரின் மனதிலும்
வெளியே சொல்லாமல்
பேணி வளர்த்து
யாருக்கும் தெரியாமல்
பாதுகாத்த மெலிதான
முதல் காதல்
No comments:
Post a Comment