குட்டி கருவாச்சி....
குட்டி கருவாச்சி......
விழியாலே மொழி பேசும் குட்டி கருவாச்சி..
வீதியில் நீ நடக்கும் போது
விண்ணில் தான் பறக்கின்றேனே...
உதட்டின் மொழியாலே...
உண்மையை சொல்வாரோ...
கல்லூரி போகும் முன்னே
கருவிழியில் உன்னைக் கண்டேனே
நேரம் போகாமல் வீதியில் திரிந்தேனே
நேரம் போதாமல் விழிமொழியை தந்தாயே
நொடிப்பொழுதில் நீ வந்து கடற்காற்று
வீசியதென்ன....
விழிகளின் மொழியாலே தவிக்க விடுவதென்ன ..
ஓர் நொடியில் பார்த்துவிட்டு
மனதினுள் பூகம்பம் கொடுத்து ஏனோ...
சொல்லடி கருவாச்சி...
நெஞ்சில் உன்நினைப்பே இருப்பாச்சு..
அங்கே பூச்செடியாய் உன்னை வைத்தேன்...
பூச்சோலையாக நீ மாறியது எப்படியோ கண்மணி
இன்னும் ஏணடி இந்த மெளனம் ...
விழியசைத்து ஓராயிரம் கதை சொன்னாயே.....
வீதியில் உனக்காக வீற்றிருக்கும் வேளையிலே...
ஊருக்கு முன்னால் நீ சிறுபெண்ணாய் தெரிகின்றாய்...
என் கண்ணில் ஏனோ அழகியாய் மாறியதென்ன...
மர்ம புன்னகை மத்தாப்பாய் கொடுத்தாயா...
விரல்களை தொட்டு முத்தவிட துடிக்கின்றேன் கண்மணி...
கல்லூரி முடிந்த பின்பே கல்யாணம் செய்து கொள்வோம்..
பக்கத்தில் நீவாடி என்தருமை கருவாச்சி...
உயிருக்கு உரமூட்டி எத்தனை நாளாச்சு...
ஓர் முத்தம் தந்துவிட்டு... தவிக்க விட்டதென்ன...
விழியாலே மொழி பேசி தவிக்கவிடாதே...
தள்ளியே நிற்கின்றேன்...
மொழி போதும் கண்மணியே...
மொழியால் வழி காட்டு வாழ்க்கைக்கு வரம் கொடு...
குட்டி கருவாச்சி..இந்த சின்ன கருப்பனுக்கு...
வாழ வழிசொல்லு....
வயற்காட்டில் மாடுமேய்க்கும் இந்த கண்ணணை தேடிவருவோயோ...
ராதையோ ...கோதையோ...
உன் பெயரை சொல்லி விடு...
முன்னாலே வந்து நின்று தந்துவிடு கணையாழி
வயற்காட்டில் வேலை செய்யும் ஓர் விவசாயி தன் காதலியை நினைத்து பாடுவது போல் அமைந்த பாடல்... அவன் தான் வணங்கும் கண்ணாக தன்னை நினைத்து பாடும் கற்பனை பாடல்...
No comments:
Post a Comment