நாரதர் வரவில்லை

பிறர் பசியை

போக்க

பிக்பாக்கெட்

அடித்தவனை

மரத்தின் கட்டி 

அடித்தனர்...ஏனோ

அடுத்தவரின் பலவருட

உழைப்பை 

வரதட்சணையாக 

சுரண்டியவனை 

வாய்நிறைய 

புன்னகையுடன்

அழைக்கிறார்கள்

மாப்பிள்ளை வாங்க....

சீர்சனம் போதுமா....

வரதட்சணை வாங்க

தெரியாத அந்த நல்லவன்

வறுமையின் 

கொடுமையால் 

குடும்பத்தை காக்க 

மாறிவிட்டான்.....

தன் பிள்ளையின்

பசியாக திருடியவன்...

அவனுக்கு ராமநாமம்

சொல்லி கொடுக்க

ஏனோ இன்னும் 

நாரதர் வரவில்லை...



No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...