நாரதர் வரவில்லை

பிறர் பசியை

போக்க

பிக்பாக்கெட்

அடித்தவனை

மரத்தின் கட்டி 

அடித்தனர்...ஏனோ

அடுத்தவரின் பலவருட

உழைப்பை 

வரதட்சணையாக 

சுரண்டியவனை 

வாய்நிறைய 

புன்னகையுடன்

அழைக்கிறார்கள்

மாப்பிள்ளை வாங்க....

சீர்சனம் போதுமா....

வரதட்சணை வாங்க

தெரியாத அந்த நல்லவன்

வறுமையின் 

கொடுமையால் 

குடும்பத்தை காக்க 

மாறிவிட்டான்.....

தன் பிள்ளையின்

பசியாக திருடியவன்...

அவனுக்கு ராமநாமம்

சொல்லி கொடுக்க

ஏனோ இன்னும் 

நாரதர் வரவில்லை...



No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...