கனவு உலகம்

 வென்றவன்

சொன்னால் 

வேதம்....சாஸ்திரம்..

வெற்றி மொழி 

இன்னும் அடைமொழி..

பலப்பல.. தோற்றவன்

வாழ்வில் தான் 

சிதறிக்கிடக்கிறது

அனுபவங்கள் பல...

வென்று விட்ட ஓருவனை

பின்தொடர ஆயிரம் நபர்கள்

தோற்றவனின் அனுபவத்தை

ஏனோ கேட்க மறுக்கிறது

கனவு உலகம்....

வாழ்வில் தோற்றவனின் 

புலம்பல்களே

நான் கண்ட பேட்டிகள்....

போட்டி உலகில் தனிமை

தேடும் உயர்ந்த பிறவிகள்..

கவிதையாய் கதையாய்

சிறகு விரிக்கிறது எனது

எழுத்துக்களில் ... அவர்கள்

தோல்வியடைவில்லை....

அவர்களின் உண்மையே

வென்றது..... ஏகாந்தம் தரும்

உணர்வும் உணர்ச்சியும்...

காதலின் மேன்மையும்..

வார்த்தைகளில் வடிப்பது கடினம்

பலகோடிபணத்தை விட பாசத்தை

சேர்த்து விட்ட சொந்தங்கள் இவர்கள்

எண்ணற்ற நிம்மதி இன்றும்

அவர்களின் வசத்தில்









No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...