அலுவலக நாகரீகம்...
.
.
.
பல வருட உழைப்பில்
ஓரு நாள் கூட
புகழாமல்
ஏசியும் பேசியும்..
வேலைவாங்கிய
மேலதிகாரிகள்..
இன்றோ அனைவரும்
புகழ்ந்து தள்ளுகிறார்கள்..
வார்த்தைக்கு வார்த்தை
திறமைசாலி..பொறுமைசாலி...
பொறுப்பானவர்.....
இவரைப்போல
ஓருவர் உண்டா....
ஏனென்றால்
வழியனுப்பும் போது
வலிக்காமல் அனுப்புவது
அனைவரும் செய்யும்
அலுவலக நாகரீகம்
No comments:
Post a Comment