என் காதல் கண்ணா.


.

.

யாதவனாக பிறக்காத என்னை கண்இமை மணி போல காப்பாற்றும் யதுகுல கிருஷ்ணா...என் இதயம் நித்தமும் நினைத்து துடிக்கிறது உன் வரவிற்காக...

வா..வா...கண்ணா...

உன் நெஞ்சில் சாய்ந்து கொஞ்சிடவே கெஞ்சலுடன் 

துடிக்கிறேன் கண்ணா....

உன் வாய்மொழி கேட்க

ஆசையில் தவிக்கிறேன்...

கீதையின் போதனைகள் 

எனக்கு உதவாது.... புரியவும் முடியாது..

உன்னை காணும் பேறு

எப்போது கிட்டும்...

வா..வா...கண்ணா....

கீதை சொன்ன மன்னவனே...

ஏழைகளின் காவலனே...

உனக்காக வெண்ணெய்.....

ஏறிட்டுப் பாரடா... ஏழைகள் துயர் தீர...

இன்னும் ஏன் சோதனை...

உன் தொடவில்லையா என் சாதனை...

மயிலறகு சிந்தனை தந்தவனே...

மாதவா என்றேன்..ருத்ரனும்

நான் என்றாய்...

சர்வமும் நீ என்றால்....

உன்னை கண்டு விட முடியாமல்..

ஏழை பேதையாய்....

மனமெனும் குதிரை அடங்க மறுக்கின்றது..

அங்கே உன் வரவு எப்போது.... 

அன்போடு அழைக்கிறேன்...

பஞ்சணையில் பெண்மையை 

அடக்கி துயிலசொல்லும்....

மன்னவர் வேண்டாம்...

புல்லாங்குழல் இசை போதும்...

உன் தோளில் சாயும்

சில நொடி இன்பம் போதும்...

மாயையில் மயங்குகிறேன்...

மாதவனே...மலையரசியின்

தமையனே.... 

சிவனையும் மயங்கிடும் 

மாயா மோகினியே வந்து விடு...

மனித காதலில் தோற்றவளுக்கு

தெய்வீக காதலை காட்டியவனே..

விரல்களும் பட வில்லை...

விரக தாபம் எனக்கில்லை...

உண்மை காதலைத் தானே நித்தமும்

தேடித் தேடி அலைந்து பின்னர்...

உன்னருகே அமர வைத்து அன்பும்

அமைதியை காட்டியவா....

கட்டியணைத்து முத்தமும் இடவில்லை...

ஆடைகளை சரித்தே சோதித்த போதும்...

கண்களில் சலனமில்லை...

பரந்தாமன் சிந்தனையை

பரமனும் பார்வதியும் கூட 

அறியாமல் வைத்தவனே

தள்ளியே நின்றாய்... தவிக்க விட்டாயே...

உனது விரல்களுடன் விரல் கோர்த்து...

வீதியில் நடைபயில அனுமதி கொடுப்பாயா..

பூட்டி வைத்த இதயத்தில் எப்படித்தான்

விருப்பத்துடன் நுழைந்தாயோ..

கோட்டைகளும் சிலநொடியில்

தகர்ந்திடுமே உன் கண்இமையில்த்

எத்தனை வல்லமையா.‌‌

பணத்தை விட பெரிய அதீதமான

பாசத்தை காட்டிவிட்டாய்..

எப்போதும் நீயே என் காதல் கண்ணா...

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...