நேற்று ஓர் கட்சியுடன் கூட்டணி
என்ற போதும் அமைதியாக இருந்தான்
இன்று வேறு ஓர் கட்சியுடன் கூட்டணி
என்ற போதும் அமைதியாக இருக்கிறான்
நாளை இன்னொரு கட்சியுடன் கூட்டணி
என்ற போதும் அமைதியாக இருப்பான்...
ஏனெனில் தனது தலைவனைப் போல
அடிக்கடி மனதையும் கொள்கையும்
மாற்றிக் கொள்ள விரும்பாத உண்மைத்தொண்டன்
அவனின் மனதில் ஆழப் பதிந்து விட்ட
ஓரே ஓர் கொள்கை எந்த நேரத்திலும்
எனது தலைவன் ஒருவனே
No comments:
Post a Comment