தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும் என்ற பட்டினத்தாரின் சிறந்த வாய்மொழியை பாராளுமன்றத்தில் பேசியதற்கு மிக்க நன்றி திரு #கமலஹாசன் அவர்களே.
என்ன தான் நீங்கள் அவர் எனக்கு இவர் எனக்கு முன்னோடி என்றெல்லாம் சொன்னாலும்..
உங்களின் ஆழ்மனதின் தேடல் இறைவனையும் இறையை பற்றிய தேடலும் உள்ளதையும், அதன் காரணமாகவே நீங்கள் பட்டினத்தார் பற்றி படித்து அவரின் இந்த சாகாவரம் பெற்ற தத்துவத்தை தமிழில் பேசி... தமிழ் மொழி இறைவனோடு பேசும் சர்வ சக்திவாய்ந்த மொழி என்பதை நீருபணம் செய்தமைக்கு நன்றி.
பழந்தமிழரின் வாழ்வில் குறிஞ்சி மருதம் முல்லை நெய்தல் பாலை என்ற ஐந்து வகையான வெவ்வேறான வாழ்வில் கலாச்சாரமும், காலத்தின் ஓட்டத்தில் தமிழ் என்ற ஓர் குடையில் கீழ் தமிழர் என்ற அடையாளம் கண்டது.
உங்களின் எல்லா படங்களிலும் வரிகளிலும் மிகத்தெளிவாக இந்தியாவின் இறையாண்மை என்றுமே சிறக்க வேண்டுமென்பதை வலியுறுத்தியது விக்ரம், தொடங்கி கைதியின் டைரி,கருதிபுனல், புன்னகை மன்னன் , தசாவதாரம் உத்தமவில்லன் படம் வரையில்... நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஓற்றுமையை சொல்லுவது புரிகிறது...
உங்களின் சினிமா வரலாற்றில் நேதாஜி என்ற தலைவருடன் நீங்கள் இருப்பது போல் காட்டீர்கள்.
உங்களுக்கு ஓர் எழுத்தாளனாக ஓர் சிறு விண்ணப்பம்.. பெண்களை படைப்பிரிவின் தலைவராக மாற்றி பெண்களை பாரதத்தை பாதுகாக்கும் ஓப்பற்ற சகத்தியாக மாற்றிக் காட்டிய நேதாஜி பற்றியும் பேசுங்கள்
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
வாழ்க இந்தியா வளர்க்க இந்தியர்களின் ஓற்றுமை
வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதே இந்தியா.
ஜெய்ஹிந்த்பாராளுமன்றத்தில் பட்டினத்தார்.
No comments:
Post a Comment