எத்தனையோ பாராட்டுக்கள்
எவ்வளவோ புகழுரைகள்
எண்ணிப் பார்க்கவே
முடியாத ரசிகர்களின்
வாழ்த்து மடல்கள்..
மேடையில் இருந்து
இறங்கும் முன்னரே
அன்பளிப்பாக பணமுடிப்புகள்
ஆயினும் ஏனோ மனம்
ஊஞ்சலாடுகிறது ...
முதன்முறையாக தோல்வியில்
துவண்டு இனிமேல்
உலகமே அவ்வளவுதான்
என்று கலங்கிப்போய்
ஓர் நாள் முழுதும்
உண்ணாமல் கிடந்து
பசி மயக்கத்தில்
தூங்கிப்போனது...
நேத்து ஏன்டா சாப்பிடலை
அப்பாவின் கேள்விக்கு
கண்ணீர் பெருகி பதில்
சொல்லிறறு இதுக்கு கூட
கிடைச்சாலும் கிடைக்கும்
தோல பெல்டால் விளாசல்
ஆனால் நடந்ததோ வேறு..
தலையை கோதிவிட்டு...
இதெல்லாம் ஓர் தோல்வியே
இல்லை... எடிசன் கண்ட
தோல்விகளை விடவா
நீ அதிகம் கண்டுவிட்டாய்
அம்மா அப்பா அண்ணன் தங்கை
என இயங்கிய உலகில்
புதிதாக நுழைந்த முதல் மனிதன்
தாமஸ் ஆல்வாய் எடிசன்..
இன்னும் பல பெயர்களை
சொல்லி ஆறுதலாக பேசியவரின்
கண்கள் கலங்கிற்று....
பத்து தடவை கீழே விழுந்து
கை கால் இரத்தம் பட்டு
நீ படித்து சைக்கிள் இப்போ
சுலபம் தானே ..புரியாமல்
விழித்தேன்.... இன்றைய
தோல்வி தான் நாளைக்கு
நீ பெறப் போகும் ஆயிரம்
வெற்றிகளுக்கு அஸ்திவாரம் .
நானும் கூட உன்னை போல அழுது இருக்கேன் ஆனால் இதுவரையில்
யாருக்கும் தெரியாது...
இது தான் என்னோட ரகசியம்
உணர்ச்சிவசப்பட்டு பேசினார்
நீ என்னோட புள்ளடா... நல்லா படி.
படிப்புதான் நம்மை எல்லாம் காப்பாத்தும்..இனி எதுக்கும்
கலங்கக் கூடாது கண்ணீரை துடை
துடைத்து விட்டேன் .. புன்னகையுடன்
சொன்னார் நான்
சொன்னது
உன்னோட கண்ணீரை....
வாரியணைத்தார்...அப்பா...
No comments:
Post a Comment