மனதில் அலையடித்த
பாசத்தையெல்லாம் மறைத்து விட்டு
பணத்தை தேடியே பாசத்தை துறந்து கடல் கடந்து சென்றேன் ...
சில வருடங்களுக்கு பிறகு திரும்பி வந்தேன்..
எதிர்பார்ப்புகளுடன் விமானநிலைய வாசலில்
குடும்பமே..வரவேற்றாலும்.. ஓரமாக நின்ற படி
கண்களால் சாட்டை சொடுக்கி தண்டிக்கிறாள் அன்பு மகள்...
இருவரின் கண்ணிலும் பாசத்தின் துளிகள்..
வாரியைத்து மார்புற தழுவினேன்...
இந்த மாதிரியெல்லாம் பண்ணிணா உன் பொண்டாட்டி வேணா மயங்குவா... நான் உன்னோட பொண்ணு நினைவு இருக்குதா...
உஷ்ணத்தின் சூட்டை உதட்டில் காட்டினாள்..
சுற்றி நின்ற சொந்தங்கள் எல்லாம் நெளிந்தனர்...
உனக்கு இப்போ என்ன செல்லம் வேணும் என்றவனின்
தோளில் சாய்ந்து கொண்டாள்..
நீ சம்பாதிசசு கொட்டியதெல்லாம் போதும்..
இனிமேல் நீ எங்கேயும் போகாதே
என்னுடனே இருந்து விடு அதுவே போதும்..
பாசவலை விரித்த மகள்...
பக்கத்தில் எதுவுமே தெரியாதது போலவே நிற்கிறாள்
அன்பான சொற்களை எழுதி கொடுத்து விட்டு....
அமைதியான புன்னகையுடன் அன்பு பொண்டாட்டி....
ஏனோ மனதில் பணத்தை பற்றிய சிந்தனைகள்
மறந்து பாசத்தை பற்றிய உணர்வுகளே மேலோங்கியது....
தனது சுமைகளை இறக்கி விட்டு இலகுவாக தூரத்தில்
பறந்து செல்கிறது விமானநிலையத்தில்
விமானங்கள்...
No comments:
Post a Comment