768 - பந்தம்..


.விஷ்ணுவின் பாதங்களின்
அருகே மகாலட்சுமி....
மகாலட்சுமியை மனதில்
வைத்து கொண்டாடும்
பக்தர்களை மிகவும் விரும்பும்.
எங்களின் மாசற்ற மாதவன்
மாயங்களை செய்து
விளையாடும் கேசவனின்...
உலக விளையாட்டில்
காதலின் பெருமையை
உணர்த்த பிறப்பெடுத்த
இரு ஆன்மாக்கள்...
தனது ஓர் பகுதியை
ராதையாக படைத்தான்...
படைத்தவன் சும்மா இருக்கவில்லை.
அவனின் செயல்கள்
இன்றுவரை
கொண்டாடப்படுகிறது
உற்சவமாக ஆட்டம்
பாட்டுகளில் நடுவே..
மந்தகாச புன்னகையில்..
சிரித்தபடி தன்னை
வணங்க வந்த
உண்மை பத்தரையும்
மாயையின் கயிற்றால்
கட்டிவிட்டு சந்தோஷங்களை
அள்ளி அள்ளிக் கொடுத்தான்....
அலைமகளின் காதுக்கு
கேட்கும்படி மெல்ல சொன்னான்...
பார்த்தாயா, பேதை பெண்ணே..
கஷ்டத்தில் என்னை வேண்டி
விரும்பி அழைத்தான் பக்தன்....
இப்போது என்னை சுத்தமாக
மறந்தே போனான்....
மயிலிறகை சூடியவனின்
மெல்லிய வரிகளை கேட்டு
வெட்கத்தில் மேலும்
சிவந்தன முகம்...உனது
மாயை வெல்ல வேண்டியே
கால்களை பிடிக்கின்றேன்...
சரணாகதி ஆனபின்னும்
சோதிப்பது அழகா...
உனது பக்தர்கள் மூலம்
தாயார் என பட்டம் கட்டி
என்னை பரிதவிக்க
வைத்த பரந்தாமா
பக்தர்களின் துயர் நினைத்து
நித்தமும் உனதடி
பணிகின்றேன்.....
குழந்தைகளின்
இஷ்டங்களை
நிறைவேற்று அது
போதும் நாராயணனா...
எட்டெழுத்தை மந்திரம் தினமும்
பக்தியுடன் தொழுபவரின்
வீட்டில் தொடங்கிவை...
நீ ஏற்படுத்திய மாயையின்
அன்பெனும் பந்தம் 
பந்தம் 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...