குடும்பத்தில் அனைவரும்
உயிர் வாழ்வதற்காக
இரவும் பகலாக உழைக்கும்
ஆண்மகன் தனக்கென
தங்கநகை வாங்க
நினைத்ததில்லை மாறாக
தன்னை சுற்றி இருக்கும்
அனைவரின் கழுத்திலும்
அணிவித்து மகிழ்கிறான்
தங்க நகைகளை சொந்தமும்
பந்தமும் முகத்தில் காட்டும்
சின்னஞ்சிறு புன்னகைக்காக தானே
அவன் சிந்தும் வியர்வை துளிகள்
ஓவ்வொரு நாளும்
No comments:
Post a Comment