ராதை இருக்குமிடத்தை
கண்ணன் தேடி வருகிறான்...
கண்ணன் தவிப்பு
ராதைக்கு தெரியாது...
மாயத்தை படைத்தவன்...
ஆசைகள் ஏதுமின்றி
வாழ்வது போன்ற பாவனையில்...
நித்தமும் அவன் நடத்தும்
உலகநாடகம் யாருக்கும் தெரியாதே...
வாழ்க்கை வெறுத்த முனிவரையும்...
ஆசை கடலில் மூழ்கவைத்து
சிரிக்கும் திரிவிக்ரமன்.
அவனை நினையாத நாளில்லை...
ஆசைகளை வெறுத்து அர்ஜுனனுக்கு
கடமையை காப்பாற்ற சொன்ன
மாதவனுக்கும் கூட
ராதை கண்டுவிட ஆசைதான்.
புல்லாங்குழல் ஊதுகிறான்
வேணுகானம் கேட்பதிலே
அவளுக்கு ப்ரீதி .....
பக்தருக்கு பிடித்தமான
விஷயங்களை சரியான
தருணத்தில் கொடுப்பதில்
கேசவனும் ஓர்
கர்ணன்
No comments:
Post a Comment