சாதியும்
மதமும்
மொழியும்
ஊரும்
பேரும்
எதுவுமே தெரியாது
எங்கோ எதற்கோ
சென்றவன்
பார்வையில்..
நுழைந்த முகம்...
சற்றே உரசி
சென்ற
ஆட்டோவின்
உள்ளே அம்மாவின்
கைச்சிறைக்குள்
சிக்குண்ட மழலை..
காற்றில் கவிதை
வரைந்த கைகள்.
தெருவில்
அனாதை போல
சென்றவனின்
மேல்பட்டது....இது
காமமில்லை...
காதல்....அம்மா
இருந்திருந்தால்....
அன்பு புரிந்திருக்கும்..
ஏனோ குழந்தையின்
தொடுதல் தூண்டியது
பாச உணர்ச்சி.....
For more read on Aalamaram at Facebook other
https://anmaai.blogspot.com