ஆசை ஆசையாய்
குழந்தையை
கொஞ்சம்
போகும்
போதும்
வயதான
பாட்டிக்கு
மருந்து
கொடுக்கும்
போதும்
காலைநேரத்து
அவசரத்தின்
போதும்
என்றாவது
ஓர் நாள்
மனைவியை
புகழ்ந்து
பேசும்போதும்
விபத்தில்
அடிபட்ட
நண்பனை
அவசர
வண்டியில்
ஏற்றும் போதும்
கோவிலில் சுவாமி
தரிசனம் செய்தாலும்
சத்தம்போட்டு
நிம்மதியை
குலைக்கிறது
செல்போன்