அவர் பெரிய பக்திமான்

பணத்தை தேடி 

இயந்திரமாக ஓடும் 

இயந்திர மனிதர்களின் 

வெற்றுகூச்சல்களை 

புறந்தள்ளி விட்டு யாரை பற்றியும் 

புறங்கூறவும் நினையாமல் 

கடவுள் படைத்த அன்பே உருவான 

இதயத்தை தன்னுள்ளே தாங்கி

அன்பு கருணை இரக்கம்..

ஈகை என்றபடி நல்ல மனிதர்களையே

தனது தேடலாக தேடி உலகில் 

உண்மையான பாசத்தை 

தேடும் முதல் மனிதன் போன்றே 

கடவுள் இருப்பதாக சொல்லப்படும் 

இடங்களில் எல்லாம் ஓர் நல்ல 

மனிதனை தேடும் அவன் ...

எல்லையற்ற அன்பை காதலாக மனதில் 

சுமந்து கொண்டு கோவில் வாசலில் 

உலகம் அவனை கேலி செய்கிறது ..

"அவர் பெரிய பக்திமான்"



(கவிதை முழுக்க முழுக்க கற்பனையே)

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...