அதோ அந்த கல்லூரி

அடேய் மகனே....அதோ தெரிகிறதே பெரிய காலேஜ் நல்லா பார்த்துக்கோ..

ஏன்ப்பா அந்த காலேஜ் என்ன...அதை நீங்க இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டு சொல்லுறீங்க

அட நீ வேற உங்க அப்பாவுக்கு வேற வேலையே கிடையாது.. எங்களுக்கு கல்யாணம் முடிஞ்ச மறுநாள் முதல்ல முதலா வெளியூர் போகலாம் என்று பஸ்ஸில் போகும் போது கூட இந்த வழியா தான் போனோம்... அன்னிக்கும் இப்படி தான் இந்த காலேஜ்-ஐ காட்டி உணர்ச்சி வசப்பட்டு பேசுனாரூ...


என்கிட்ட கூட இதை காட்டி இருக்கீங்க நினைவு இருக்கா அப்பா...


அப்பாவின் கண்களில் ஏதோ கனவு விரிந்தது... நான்+2 முடிச்ச பிறகு படிச்சா இந்த காலேஜ்-ல தான் படிக்கணும் என்று எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா..

அதனால் தான் மகனே சொல்லுறேன்..நீ எப்படியும் இந்த காலேஜில் படிக்கணும்...சரியா டா..

கொத்த வேலை பார்த்து கஷ்டப்பட்டு காலத்தில் கூட சிறுக சிறுக பணம் சேர்த்து படிக்க வைத்த அப்பா...

இன்றும் கூட அந்த கல்லூரியை கடந்து போகும் போது உணர்ச்சி வசப்படுகிறார்...

அந்த கல்லூரியின் அருகில் வயதான காலத்தில் தானாகவே . வந்து சேர்ந்த.. முதியோர் இல்லத்தில்.

 மாடியில் மாலை நேரத்தில்  நடையிலும் போது தனக்கு தானே சொல்லிக்கொள்வார்..


இந்த கல்லூரியில் நானும் படிச்சிருந்தா.. எனக்கும் வெளிநாட்டில் வேலை கிடைச்சு போயிருப்பேன்...

 சிலருக்கு நினைச்ச கல்லூரி கிடைக்கலை என்று கவலை

சிலருக்கு படித்த கல்லூரியை விட படிக்க சீட் கிடைக்காமல் போன கல்லூரி மீது தான் ஆசை அதிகமா இருக்கிறது...


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...