ஏன் அந்த மரத்தையே வெறிச்சுகிட்டு இருக்கீங்க என்ற பரிமளா...
காதலில் தோற்று நம்மை யாருக்குமே புரிந்து கொள்ளவில்லையே என்றே சிந்தித்த படி இருந்த கேசவனின் அருகே வந்து அவனின் அமைதிக்கு இடைஞ்சல் தரும் விதமாக கேள்விகளை கொடுத்தாள் பரிமளா.
உனக்கு இப்போ என்ன வேணும் அதை மட்டும் கேளூ என்றவனிடம்.
எப்போ பார்த்தாலும் எதுக்கு எரிச்சு விழுறீங்க அப்படியே நான் கேட்டாலும் நீங்க குடுத்திட போறீங்களா என்ன சலித்து கொண்டாள்
எதாவது வேணும்மா கேளு.. என்னால முடிஞ்சா செய்யுறேன்
உதடுகளில் ஏதோ முணுமுணுத்தாள்
கேட்கிறத கொஞ்சம் சத்தமா தான் கேளு பரிமளா
அவளின் உதட்டில் புன்னகை மலர்ந்தது..ஓர் அழகான பொண்ணு கூட தனியா இருந்து எப்படி தான் உங்களால பேசாம இருக்க முடியுதோ...
இன்னிக்கு வீட்டுக்கு போன உடனே நேரா கண்ணாடியில் போய் பாரூ உன் மூஞ்சிய.அப்போ தெரியும் நீ அழகா இல்லையான்னு...
சரி நான் அழகில்லை தான்.ஆனாலும் ஓர் வயசு பொண்ணு அதாவது நம்புறீங்களா...
அதுக்கு நான் உன் கால்ல விழுணுமா அல்லது தலையில் தூக்கி மேல வைச்சு புகழ்ந்து பேசணுமா...
ஆமா நீங்க சரக்கு அடிப்பீங்களா...
நானா பீடி சிகரெட் கூட குடிக்க மாட்டேன்..அது எல்லாம் காசை கரியா ஆக்கிற வேலை அதுபோக எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. கோபம் என்னோட ஓர் கெட்ட குணம் போதுமா
நான் உங்கள மாப்பிள்ளை பார்க்கவா வந்திருக்கேன் இவ்வளவு தூரம் சொல்லுறீங்க
நீ இல்ல அந்த ரோடுல போற கிழவி கேட்டாலும் இந்த பதிலை தான் சொல்லுவேன் போதுமா...
நீங்க யாரையாவது லவ் பண்ணுறீங்களா கேசவ்
ப்ளீஸ் நான் உன்கிட்ட ஏதாவது கேள்வி கேக்குறேனா..நீ மட்டும் ஏன் எப்போ பார்த்தாலும் கேள்வி கேட்டகிட்டே இருக்கிற எனக்கு எரிச்சலா இருக்கு
நான் நான் பேசலை நீ அந்த மரத்தை நல்லா வெறிச்சு பாருங்க..ஏன்னா யாராவது தூக்கிட்டு போயிட கூடாது என்றே கேலியுடன் சிரித்தாள்
ஜன்னல் அருகே சேர் போட்டு அமர்ந்திருந்தேன் மேலே தனது துப்பட்டா படும் படியாக சாய்ந்த படி நின்றாள்
ஏய் பரிமளா கொஞ்சம் தள்ளி நில்லு உன் துணி என் மேல படுது.
இது ஓண்ணும் ஜமுக்காளம் இல்ல ரொம்பவே லேசான துப்பட்டா தான்.இது உங்க மேல பட்டது வலிக்குதோ...
கேசவனுக்கு அவளின் செயல் எரிச்சலாக இருந்தாலும் நாம ஏதாவது பேச அவள் மீண்டும் கேள்வி கேட்டே டார்ச்சர் பண்ணுவா என்று மெளனமானான்.
அவளோ வேண்டுமென்றே துப்பட்டாவை அடிக்கடி சரி செய்வது போல் அவனின் மீது படும் படி செய்தாள்...
அவனோ எதுவுமே பேசாமல் அந்த மரத்தை பார்த்தபடியே இருந்தான்
சில நிமிடங்களுக்கு கூட அமைதியாக இருக்க முடியாத அவள் மீண்டும் பேச தொடங்கினாள் நான் அவனை காதலிக்கவே இல்லை ஆனா அவன் தான் என் பின்னாடியே அலைஞ்சான்.. அப்படி என்கிட்ட என்ன இருக்குன்னு தெரியலை... சீக்கிரமா கல்யாணம் பண்ணணும் என்று வாரா வாரம் வந்து பேசிட்டு போறாங்க... தான் பேசுவது எதையுமே அவன் சிறிது சட்டை செய்யவில்லை என்று அவளுக்குள் ஆத்திரம் வந்தது ஆயினும் இவருக்கு நம்ம கஷ்டத்தை புரிஞ்சுகணும் என்று தலையெழுத்தா என்ற விரக்தியில்
அவன் ஏதும் பேசாமல் இருப்பதை நினைத்தும் அவளின் கண்ணில் நீர் கசிந்தது.
எதிர்பாராத சம்பவம் ஓன்று அப்போது தான் நடந்தது
எதையுமே கவனிக்காதவன் போல் அமர்ந்திருந்தவன்... ஏய் நீ எதுக்கு இப்போ கண்கலங்குற... உனக்கு ஏதாவது பிரச்சனையா என்றே பதறினான்
தன்னை அவன் கவனிக்கிறான் என்று நினைத்த மாத்திரத்தில் அவளின் கண்ணீரையும் மீறி சிரிப்பு தான் வந்தது...
என் கண்ணில் கண்ணீர் வந்தா உங்களுக்கு என்னவாம் என்று மீண்டும் கேலியுடன் பேச தொடங்கினாள்
எனக்கு யாராவது அழுதாங்கன்னா. எங்க அம்மா நினைவு வந்திடும் அவங்களால் ஓர் சிறு அதிர்வை கூட தாங்க முடியாது, அவங்களுக்கு குழந்தை மனசு தெரியுமா???
உங்களுக்கு மட்டும் என்னவாம்????
ப்ளீஸ் , நீ எதுக்கெடுத்தாலும் இப்படி தான் கேள்வி கேப்பீயா..உன்னை எல்லாம் எப்படி தான் வீட்டுல சமாளிக்கிறாங்களோ தெரியலை...
உங்களுக்கு என்னை நல்லாவே புரியுது.பிறகு ஏன் புரியாத மாதிரியே நடிக்கணும்
ஏன்னா நீ என்று பேச ஆரப்பித்தவன் சுதாரித்து கொண்டு மீண்டும் அமைதியா ஜன்னலோரமாக வெறித்து பார்த்த படி திரும்பினான்
அவளோ கண்ணீரை துடைத்து கொண்டு மீண்டும் அவனருகில் நின்றாள் ஜன்னலோரம்
No comments:
Post a Comment