வீட்டுக்கு போனா அப்பா திட்டுவார்..சென்ற வாரம் வீட்டில் நடந்த நிகழ்வை ஏனோ மனம் நினைத்து பார்த்தது
நீ என்னைக்கு தான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருக்கே... பிறகு எப்படி நாயே உனக்கு வேலை கிடைக்கும்
நீங்க சும்மா இருங்க, எப்போ பார்த்தாலும் என் பிள்ளைய கரிச்சு கொட்டாதீங்க.... அவன் மனசை கஷ்டபடுத்தாம ஓர் நாளாவது இருக்கீங்களா
தன்னை நினைத்து தனக்கே கேவலமா இருந்தது... ஆனாலும் அதையும் மீறிய ஓர் சிந்தனை அவனின் மனதில் எட்டிப்பார்த்தது
நின்று கொண்டிருந்த பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த ஹோட்டலில் எச்சில் இலை எடுத்து விட்டு மேஜை துடைத்து கொண்டு இருந்தது ஓர் சிறுவன்..
ஏனோ அவனை நினைக்கும் போது பொறாமை வந்தது. இந்த சின்ன வயசுலயே இவனுக்கு வேலை கிடைச்சிருச்சு...நாம படிச்சு டிகிரி வாங்கி என்ன பிரயோஜனம் ஓவ்வொரு வாரமும் இன்டர்வியூ போக அப்பாவிடம் காசு வாங்குவதை நினைச்சா...பொங்கி வந்த அழுகை.... சுற்றிலும் நிற்கும் மனிதர்களை நினைத்த காரணத்தால் காவேரி ஆறு போல் ஆனது
தம்பி இன்னிக்கு தானே ஊருக்கு போறதா சொன்னே...போகும் போது இந்த வார போனஸ் மறக்காம வாங்கிட்டு போ... உன்னை பெத்தவங்க கையில் முதல் மாச சம்பளத்தை அப்படியே பிரிக்காம கொடுடா........அதை விட பெரிய சந்தோஷம் உலகித்திலேய இலைச்.. அவங்க முகத்தில் எவ்வளவு சந்தோஷம் வரும் தெரியுமா...
எச்சில் இலை துடைத்தவனின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி விவரிக்க முடியாதது....
உணர்ச்சிவசப்பட்டு பக்கத்தில் இருந்த பாழடைந்த கோபுரத்தை கையெடுத்து கூப்பிட்டு கன்னத்தில் போட்டுக் கொண்டான்..... அப்போது அவனின் கன்னத்தில் சாம்பாரும் சட்னியும் இட்லியும் போட்டி போட்டு முத்தமிட்டது.. நெற்றியில் சந்தனமும் குங்குமம் கன்னத்திலோ எச்சில் பருக்கைகள்....
என்னங்க இதை பாருங்க.. இதன் சரியான சாமி பைத்தியம் போல... கழுத்தில் பல பவுன் அணிந்திருந்த பெண் தன் கணவனிடம் காட்டி கேலியும் காதலும் செய்தாள்
ஏன்டீ நீ எப்போவுமே கண்ட கண்ட நாயை எல்லாம் தான் பார்க்குறே... யாரையும் பார்த்து இரக்கபடாதே அவன் தலையெழுத்து அனுபவிக்கிறான்.... அப்பன் ஆத்தா சொல்லை கேட்டு இருந்து இவனுக்கு இந்த நிலை வந்திருக்குமா..... அவனின் பேச்சு சத்தம் ஹோட்டலில் இருந்த அனைவரின் காதுகளிலும் ரீங்காரமிட்டது..... அந்த சிறுவனை சுற்றி இருந்தவர்கள் ஏதோ குற்றவாளி போல பார்த்து முனைந்தனர்...
ஆனால் அவனோ சாமி காப்பாத்திருச்சு.. இனி எந்த கவலையும் இல்லை என்ற மனநிலையில் அடுத்த மேஜையில் புதுமண தம்பதிகள் விட்டு சென்ற எச்சில் இலை எடுத்தான்... அவளின் முகத்தில் எந்த ஓர் சலனமும் இல்லை... நமக்கு படிப்பு மண்டையில் ஏறி இருந்தா நமக்கும் நல்ல வேலை கிடைச்சுக்கும்...என்ற வலியே இருந்தது
சாப்பாடு மண்ணு மாதிரி இருக்கு இந்த சாப்பாடு எப்படி தான் நீயெல்லாம் ரசிச்சு சாப்பிடுறீயோ.
இது கூட இல்லாம எத்தனை பேர் கஷ்டபடுறாங்க தெரியுமா.. கடவுள் நமக்கு இதையாவது தந்திருக்கிறாரே என்று கடவுளுக்கு நன்றி சொல்லுங்க என்றவளிள் இலையும். மாமனார் காசை தானே என்று தூக்கி வீசிய ஏகாதாளமும் அதில் இருந்தது
அவனின் சொற்களை கேட்டவளுக்கு தர்மசங்கடமாக உணர்ந்தாள் அவளின் கண்கள் பனித்தது...
சில நிமிடங்களுக்கு முன் கேலியில் சிரித்தவளின் கண்களில் அவன் மீதான இரக்கம் கசிந்தது....
கொஞ்சம் இரு இந்தா வந்திடுறேன்..என்றவன் எதிர் புறம் இருந்த பெட்டி கடையில் சென்று சிக்ரெட் பாக்கெட் வாங்கினான்...
ஓர் நிமிட அவளுக்கு அந்த சிறுவனை மீண்டும் பார்க்க வேண்டும் போல இருந்தது...அவனை வெறித்து பார்த்த படியே நின்றாள்...
ஏன்டீ உங்க அம்மா சொன்ன மாதிரியே நீ வார்த்தைகளில் உண்மை வர மறுத்தது
என்னங்க ஓர் நிமிஷம் கைக்குட்டையை மறந்து வைச்சுட்டேன்... அவர்கள் சாப்பிட்ட மேஜையில் அருகில் சென்றவளை கூட சட்டை செய்யாமல் மேஜையை துடைத்த படி இருந்த சிறுவன்...
உனக்கு அக்கா தங்கச்சி யாராவது இருக்காங்களா.....
எனக்கு உடன் பிறந்த அக்கா தங்கச்சி கிடையாது சித்தப்பா வீட்டில்ல தான் தங்கச்சி பாப்பா இருக்கா..
அவர்களின் சம்பாவனை இருவரை தாண்டி பிறர் காதுகளுக்கு கேட்கவில்லை....
தயவுசெய்து அவங்களை நல்ல படிக்க வை... அப்பா அம்மா பார்த்த மாப்பிள்ளையை கட்டிக்க சொல்லு தயவுசெய்து காதல் திருமணம் பண்ணிடாதே....
அக்கா அவளுக்கு வயசே நாலு தான் ஆகுது...
அதனால் என்ன சின்ன வயசுலையே சொல்லி வளருங்க.... காதல் ஓர் ஏமாத்து வேலை படிக்காதவனுக்கு நல்ல படிச்ச பொண்ணு மேல தான் காதல் வருது.. ஆனா அது உண்மை கிடையாது...
படிச்ச பொண்ணா இருந்தா நம்ம சொல்லுறதை எல்லாம் கேட்டு அடங்கி நடப்பாள் எதிர்த்து பேச மாட்டா என்ற நினைப்பு...
அப்பா அம்மாவை நம்ம கிட்ட பழகும் அனைவருமே எதிர்பார்போட தான் பழகுவாங்க....
புத்தம் புதிதாக மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக வாங்கி கொடுத்த பைக்
ஏறிக்கோடீ
நமக்கு தான் படிப்பு சுத்தமான வரலையே..பிறகு எதுக்கு எப்போ பார்த்தாலும் படி படின்னு படுத்தினார்.. ஓர் வேளை பத்தாவது பெயிலா போயிருந்தா.. ஏதாவது
No comments:
Post a Comment