732 - இந்தியாவின் தலைவர் நேதாஜி

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க மிதவாதம் சரிவராது என்றே முழக்கமிட்டனர்.


காந்தி நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக போட்டி போட்டது மட்டுமல்லாமல், தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.


ஆனால் ஆறே மாதத்தில் தலைவர் பதவியை விட்டு விலகினார்.

வெறும் தலையாட்டி பொம்மையாக இருக்க எனக்கு துளியும் விருப்பமில்லை.

எனவே எனது வழியில் நான் இந்திய சுதந்திரத்திற்கு பாடுபடுவேன் என்று தனியாக களம் கண்டு, மாபெரும் தலைவராக உருவெடுத்தவர்.

ஓர் மாநில கட்சியில் பதவி கிடைக்க வில்லை என்ற ஆத்திரத்தில் தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என்றே சிலர் புதிய புதிய அரிதாரம் பூசி.. கட்சியின் பெயரால் 

காசு பணம் தலைவர் பதவி என அலைந்த போது.

தன்னிகரற்ற இந்திய தலைவராக உருவானவர்.


இவரின் வரலாற்றை எழுதும் போது அத்தோடு தமிழரின் வரலாறும் சேர்ந்தே இருக்கும்.


தமிழை சரியாக மேடையில் பேசவே தெரியாமல் " தமிழ் காட்டுமிராண்டி பாஷை" என பிதற்றிக் கொண்டு இருந்த சமயத்தில்..

இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைப்பு செய்தவர்.

எனக்கு இன்னொரு பிறவி இருக்குமென்றால். அப்போது நான் தமிழனாக பிறக்க ஆசைப்படுகிறேன் என தமிழ் மற்றும் தமிழரின் பெருமையை இந்நிய அரங்கில் மட்டுமல்ல.

உலக அரங்கிலும் தமிழுக்கு ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்தியவர்.

 தேசிய ராணுவத்திற்கு லட்சுமி பாய் என்பவரை நியமித்து பெண்களை வீராங்கனையாக உலகிற்கு அறிமுக செய்து வைத்தார்.


அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சுதந்திர கொடியை பட்டொளி வீசி பறக்க விட்ட தைரியசாலி.


இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பலருக்கும் இவரின் வீரம் செறிந்த கதை நன்கு மனப்பாடம் 

இந்தியாவின் நலனே முக்கியம் என்ற இவரின் கோட்பாடு வீரமிக்க வரலாறு 

"தேசியமும் தெய்வீகம் எனது இரு கண்கள்" என்றவரை தனது நண்பராக கொண்டவர் இந்த வங்கத்தின் சிங்கம்..


No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...