தம்பி நீ சாப்பிட்டா
என்று ஓவ்வொரு
வேளையும் கேட்ட
அம்மாவும் அக்காவும்
ஆயிரம் ஆயிரம்
கனவுகளை சுமந்து
வாழும் அவனின் காதலி
அத்தனையும் நினைக்கவும்
நேரமின்றி கண்கொட்டாமல்
வெயிலும் பனியும் கடந்தே
துப்பாக்கியை தோளில்
சுமந்தபடி எல்லையில்
எதிரிகளின் தொல்லை தீர்க்க
தன்னுயிர் பற்றி
பயமின்றி நெஞ்சத்தை
நிமிர்த்தி காவல்காக்கிறான் எனதருமையான தோழன்...
கடமைமிக்க இந்திய ஜவான்
No comments:
Post a Comment