வேலி

வல்லயக்கம்பு ஒன்று தான் பலருக்கு காப்பு.
இரண்டு வருடங்களுக்கு ஓர் முறை கொடுக்கப்படும் கொடை ஊர் மக்கள் திரண்டு வந்து சிறப்பு செய்வது மரபு.

கிராமத்து தேவதை கதை கேட்டு வளர்ந்த மனிதனில் தவறு செய்பவன் மிகவும் குறைவு.
சிலரின் வாழ்க்கை மட்டுமல்ல பலரின் வாழ்க்கையும் விதிப்படி தான் செல்லும் பரமனும் இதில் அடக்கம் என்பதே தேவதை கதைகள்..
சில தெய்வங்கள் விதியின் விளையாட்டு விரும்பி மனித உருவில் வந்து வாழ்ந்து பின்னர் தன் இறை சக்தியை உலகு அறிச்செய்யும்.
அவர்களுக்கு நிலையம் போட்டு வணங்கி வருவதும் இயல்பான நடைமுறை..

வயல் வெளியில் வெயில் மழையில் நனைந்து ஊரை இவர்கள் பாதுகாப்பு செய்வது. கிராமத்தில் பிறந்து வளர்ந்தவருக்கு மட்டுமே விளங்கும்.
நோய் நொடி தீர்த்து வைப்பது முதல் தலைமுறைக்கும் காவல் வருவது வரை கதைகள் ஏராளம்..

முறுக்கிய மீசை, அகண்ட உருட்டும் விழி.
ஆனால் கோபம் என்பது இவர்கள் தங்களுக்கு தாங்களே போட்டுக் கொள்ளும் வேலி..

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...