குழந்தைகளின் உலகம் - மகிழ்ச்சியின் சொர்க்கமே

குழந்தைகளின் உலகம் என்றுமே சந்தோஷமானது. அதில் பொய்யும் புரட்டும் இல்லை. பக்கத்தில் இருப்பவன் முன்னேறி விடக்கூடாது அவனுக்கு எப்படியாவது இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று சிந்தனை. இல்லை.
இவன் என் ஜாதி மதம் என்று பிரிவினை கிடையாது...
இவனை வளர விட்டால் நம்ம பதவிக்கு ஆபத்து என்று வஞ்சனை கொண்டு கீழே தள்ளி விட்டு, பிறகு யாருக்கும் நான் தீங்கு செய்யவில்லை, சனிஸ்வரன் என்னை ஏன் இப்படி கஷ்ட படுத்துகிறார் என்ற புலம்பல் கிடையாது..
யாருக்கு தெரியாமல் பாவமன்னிப்பு கேட்கும் அவசியமில்லை.

தனக்கு பரிசு கிடைக்கவில்லை என்னும் பொறாமை இல்லை மாறாக பக்கத்தில் இருப்பவரின் பெயரை டீச்சர் சொல்லும் போது சத்தமாகவும் சந்தோஷமாகவும் இவன் என் பிரண்டு தெரியுமா உனக்கு? என்ற சந்தோஷ மிகுதியான உள்ளம் தான் அதில் உண்டு..
நிச்சயமாக எப்படியும் என் பெயரையும் கூப்பிடுவார்கள் என்று தன்னம்பிக்கை அதிகம்..
அதற்குள் பள்ளி மணி அடித்து விட்டால் வீட்டிற்கு வரும்போதும் வந்த பிறகும் தன் நண்பனுக்கு கிடைத்த பாராட்டுகளையும், அவனுக்கு நான் எப்படி கைதட்டி சந்தோஷபடுத்தினேன் தெரியுமா? என பேசத்தொடங்கி நாளை என் பெயர் சொல்லி அழைக்கும் போதும் அவன் எனக்கு முதல் ஆளாக கைதட்டுவான் என்றபடியே யாருக்கு தீங்கு நினையாத குழந்தை உலகம்
மகிழ்ச்சியின் சொர்க்கமே.....

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...