அரசு அதிகாரிகளின் வலிகள்

நல்ல பெயர் கிடைத்தால் அதற்கு முழு முதற்காரணம் நானே எனது ஆட்சி செய்யும் திறமையே என்று மார்தட்டிக் கொள்வதும்.

எங்காவது ஓர் பிரச்சினை என்றால், நாங்கள் பல முறை எச்சரிக்கை செய்த பிறகும் அரசு அதிகாரிகள் எங்களின் பேச்சை கேட்கவே இல்லை என்று வீண் பழியை அவர்களின் மீது போடுவதும்.

இன்றைய காலகட்டத்தில் சில சுயநல மனிதர்கள் பேசும் பேச்சுக்கள்.

அரசு அதிகாரிகளின் அதிகாரமும் அதை செயல்படுத்தும் விதமும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இங்கே பல நேரங்களில் அரசு அதிகாரிகளின் கைகளை கண்ணுக்கு தெரியாத சில அதிகார பசிமிக்க மனிதர்களால் கட்டி போடப்படுகிறது என்பதே நிதர்சனம்.

அரசு அலுவலகத்தில் இருக்கும் எல்லோருமே கையூட்டு பெறுவதாகவும் அவர்கள் ஏகபோக வாழ்க்கை வாழ்வது போலவும் சித்தரிக்கும் அநாகரிகமான செயலை பலர் திட்டமிட்டே செய்கின்றனர்.


அதற்காக அரசு ஊழியர்கள் அனைவரும் கையூட்டு பெறவே இல்லை என்று நான் சொல்லவில்லை. அப்படி சொன்னால் அது மாபெரும் பிழையாகவே இருக்கும்.

ஏனெனில் அரசு லஞ்சம் ஒழிப்பு துறை என்ற ஓன்றை ஏற்படுத்தியதே.. சிலர் செய்யும் செய்கையால் ஓட்டு மொத்தமாக நிர்வாகத்தின் மீது ஏற்படும் அவப்பெயரை நீக்கவே .. அதனால் தான் மக்களுக்கு அரசின் மீதும் அரசியல் சாசனத்தின் மீதும் இன்னும் அதிகமாகவே நம்பிக்கை உள்ளது 



சென்ற மாதம் வரை எதிர்கட்சிகள் எல்லாமும் சேர்ந்த வாக்கு பதிவு இயந்திரமே போலியானது.தேர்தல் ஆணையம் ஓர் கட்சி சார்பாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.அதை நாங்கள் நம்பவே மாட்டோம்.. எங்களுக்கு மீண்டும் பழையபடி ஓட்டு சீட்டு முறையை அமல்படுத்தவே விருப்பம் என்பது போல் பேசினர்.

ஆட்சியில் இருப்பவர்கள், தங்களின் எல்லா விளங்களை கொடுத்த பிறகும் சிலர் தங்களின் பழைய பல்லவியை பாடினர்.

ஆனால் முற்றிலும் தோற்றுப் போவோம் என்ற பயத்தில் புலம்பிய கட்சிஙள் சில அபரிமிதமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று விட்டனர். இதன் பிறகாவது வாக்கு பதிவு இயந்திரமும் தேர்தல் ஆணையமும் சிறப்பாக செயல்பட்டு உள்ளது.. எங்களின் தவறான புரிதலுக்கு மன்னிக்கவும் என்று அந்த கட்சிகளை ஓர் வார்த்தை கூட பேசவில்லை 

மாறாக நாங்கள் வென்று விட்டோம்... எங்களின் வெற்றி என மார்தட்டி பேசுகின்றனர்.

அரசும் அரசு இயந்திரமும் சிறப்பாகவே செயல்படும், சில சுயநலவாதிகள் தங்களின் போலி அதிகாரத்தை காட்டி பண்ணும் பம்மாத்துகளை புறந்தள்ளுங்கள்.

இன்றும் தான் வாங்கும் சில ஆயிரம் சம்பளத்திற்காகவும், தனது மனசாட்சிக்கு பயந்து நடக்கும் நேர்மையான மனிதர்களும் அரசாங்கத்தின் ஊழியராகவே இருக்கின்றனர்.

தயவுசெய்து சுயநலவாதிகள் செய்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு அரசு அதிகாரிகள் என்ன செய்ய முடியும்


புரிந்து கொள்ளுங்கள் நேர்மையான அரசு அதிகாரிகளின் வலிகளையும், ஓவ்வொரு நாளும் அவர்கள் சந்திக்கும் வலியான வாழ்வையும்.


அரசு அதிகாரியின் பணி என்பது சுலபமானது அல்ல.அது முள்ளின் மீது இருக்கும் ஆசனம். 

திறமையான மனிதரை சுதந்திரமாகவும் தைரியமாகவும் செயல்பட அனுமதித்தால் இந்தியாவின் வளர்ச்சி என்பது உலக நாடுகளும் உற்று நோக்கும் வகையில் அமையும் என்பதில் ஐயமில்லை 

ஜெய்ஹிந்த் 

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...