வாக்குபதிவு எந்திரத்தை குறை பேசிய வாய்கள், வாயடைத்துப் போய் அமைதியாக மாறிவிட்டது.
ஆம் இந்திய ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை, என்றுமே மாறாதது.
இது தனிமனித வெற்றியல்ல ஒட்டுமொத்த மக்கள் தங்களின் ஜனநாயகத்தை காப்பாற்ற செய்த செயல்.
பட்டொளி வீசி பறக்கட்டும் இந்த பாரதத்தின் மூவர்ண கொடி பாரெல்லாம் சிறக்கும் வண்ணம்.
இந்தியாவின் பெருமையும் வளர்ச்சியும் உலக பொருளாதாரத்தில் தவிர்க்கவே இயலாத மாபெரும் சக்தியாக பாரத தாய் உருவெடுக்கிறாள்.
இனி இந்தியாவே உலகத்தின் அச்சாணியாக செயல்படும் வகையில் கொள்கைகளும் திட்டங்களும் வகுக்கப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
வெளிநாட்டில் போய் வேலை பாரப்பதை பெருமையாக நினைத்த காலெல்லாம் மலையேறிப் போகட்டும்.
உள்ளூரில் வேலை பார்ப்பதும். உள்ளூரில் விளையும் பொருள்களை தன்னிறைவு பெற்று உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வல்லரசாக இந்தியா மாறட்டும்.
வாழ்க ஜனநாயகம் வாழ்க பாரதம்
ஜெய்ஹிந்த்
No comments:
Post a Comment