கன்னியாகுமரியில் மோடி

 


நாளை முதல் கன்னியாகுமரிக்கு வரும் ஓவ்வொரு சுற்றுலா பயணிகளின் பார்வையும் மாறுபட்ட கோணத்தில் தான் இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.


சென்ற வருடம் வரை ஓவ்வொரு வருடமும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள்.சில நேரங்களில் விவேகானந்தா பாறை சென்று பார்க்காமலே சென்றதுண்டு.


ஆனால் சரித்திரத்தின் ஏடுகளை மாற்றி எழுதுவதில் மாபெரும் தீராத காதல் கொண்ட எண்ணற்ற மனிதரில் ஒருவராக செயல்படும் பலரில் இவரும் ஒருவர்.


அதனால்தான் என்னவோ விவேகானந்தர் தியானம் செய்த இடத்திற்கு போய் தியானம் செய்தார்.


இதுவரை எத்தனையோ நபர்கள் நாட்டை ஆண்டனர்.அவர்கள் தங்களையும் தங்களின் கட்சியையும் கல்லாவையும் எப்படியெல்லாம் வளப்படுத்த முடியும் என்றே செயல்பட்டனர்.


ஆனால் இந்த மனிதரோ தனது செயலால் நாட்டின் கல்லாபெட்டி வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்கிறார்.


அவருக்கு இறையருள் கிடைத்தா அல்லது அவரின் தியானம் அனுபவம் என்னவென்வதை அவர் சொன்னால் தான் புரியும். ஆனால் அவரோ எதையும் பற்றிய பயமோ விமர்சனங்கள் பற்றிய கவலையோ சிறிதும் இல்லாமல், தனது எண்ணம் இந்த பாறையில் நரேன் இருந்த நிலையில் நானும் இருக்க முயல்கின்றேன். எனது முன்னேற்றத்தை விட நாட்டின் முன்னேற்றம் மிகவும் முக்கியமானது அவசியமானது.


உலக அரங்கில் இந்தியாவின் புகழை உயரச் செய்த விவேகானந்தர் போன்றே, வருங்கால இந்தியாவின் புகழை உலக அரங்கில் உயர்த்த வல்லமை தாருங்கள் என வேண்டி இருக்கலாம்.


இனி விவேகானந்தர் பாறையை பார்க்க செல்லும் அனைவரின் மனதிலும் நாமும் இங்கே தியானம் செய்தால் நமக்கு நன்மை கிடைக்கும் என்ற சிந்தனையில் சில நொடியாவது அந்த தியான மண்டபத்தில் அமர்வார் என்பது திண்ணம்.


அப்படி அமரும் ஓவ்வொரு மனிதனும் தன்னை ஓர் நரேன் போல் உணர்ந்து செயல்படுவது காலத்தில் ஆசை போலும்.


பொறுத்திருந்து பார்ப்போம்... உங்களைப் போலத்தான் நானும் இது வரைக்கும் விவேகானந்தர் பாறைக்கு சென்றதில்லை.ஆனால் இனிமேல் கன்னியாகுமரிக்கு சென்று அந்த தியான மண்டபத்தை கண்டால் நாமும் தியானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும் என்பது மட்டும் நிச்சயம்.


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...