நரேந்திரன் என்னும் தன்னிகரற்ற இந்தியத் தலைவன்

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க எனக்கு உங்களை மாதிரியே ஓர் பையன் வேண்டும் என்ற வாலிப வயது பெண் கேட்ட மறு விநாடியே....இதோ அப்படியே ஆகட்டும் தாயே என்றே சாஷ்டாங்கமாக அந்த பெண்ணின் காலில் விழுந்து.. தாயே இன்று முதல் நான் உங்களுக்கும் ஓர் மகனே என்று வணங்கிய நரேன் என்ற விவேகானந்தர்....வணங்கப்பெற்றவர் நிவேதிதா....பல மாதங்கள் குருநாதர் ராமகிருஷ்ணன் யோக நிஷ்டையில் இருந்த போது அவருக்கு மலம் ஜலம் உடல் சுத்தம் செய்தவர் விவேகானந்தர்.. அவரின் மேடை பேச்சை மட்டும் ரசிக்கும் நபர்கள் பலருக்கு அவரின் தியாகமும் நேர்மை பற்றி அறிமுகம் இருக்கிறதா....


விவேகானந்தர் என்று பலராலும் அறியப்படும், இந்து சமய துறவியே. இந்து மத கருத்துகளை மேற்கத்திய நாட்டிற்கு எடுத்துச் சென்றார்.

இந்து மதத்தில் இருக்கும் உருவ வழிபாடு பற்றி, ஓர் மன்னர் பேசிய போது அந்த மன்னரின் கண்முன்னரே அவரின் புகைபடத்தை எடுத்து தரையில் வீசி விட்டு அமைச்சரே. உங்கள் மன்னரின் புகைபடத்தை உதாசீனம் செய்வது போன்ற செயலை செய்யுங்கள் என்றார்.

அதை கேட்டு அந்த அரசவை பதறிப்போன, யாரும் அந்த மன்னரின் புகைப்படத்தை உதாசீனம் செய்ய முன்வரவில்லை .

இந்த செயலை செய்து, அந்த மன்னனுக்கு இந்து மதத்தின் இருக்கும் உருவ வழிபாடு என்ற கொள்கை மூட நம்பிக்கை அல்ல, உருவமற்ற இறைவனை அறிய உருவ வழிபாடு மிகவும் முக்கியம் என்பதை புரிய வைத்தார் 

சமூக நீதி சமத்துவம் என்று மேடையில் மட்டும் முழங்கிவிட்டு எடைக்கு எடை பணம் வாங்காதீர்கள்.


தனது வாழ்நாளில் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர்.

இந்தியாவின் பல சமஸ்தானத்தின் மரியாதைக்குரிய மாபெரும் இந்து மத துறவி. இவரை போன்ற தன்னலமற்ற துறவிகளால் தான் இன்றும் இந்து மத கலாச்சாரமும் பண்பாடும் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது 

இந்து என்பது வெறும் மதம் அல்ல. மக்களின் வாழ்வியலோடும் இயற்கையோடும் மனிதனின் உடல் ஆரோக்கியத்தையும் யோகாசனம் என்ற பல விஷயங்களை தன்னுள் அடக்கிய மதம் . இந்திய மக்களின் உணர்வுகளில் இரண்டற கலந்த விஷயங்களை உலகறியச் செய்த இந்தியாவின் ஓப்பற்ற தன்னலமற்ற துறவியே நரேன் என்ற விவேகானந்தர் 



No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...