தாத்தா நீங்க ரொம்பவே லக்கி


பொண்டாட்டி ஊருக்கு போய் இரண்டு நாள் கூட ஆகவை அதுக்குள்ள. இப்படியா ஆகணும்.

ஹோட்டலில் போய் சாப்பிட்டு ஒண்ணுமே நல்லாவே இல்லை..ஓரே மசாலா பொடி அல்லது ஓரே எண்ணெயா இருக்கும் என்ன செய்யுறது என்று சாப்பிட்டு தொலைச்சது இப்போ காய்ச்சலில் வந்து நிக்குது 

தனக்கு அவரோ புரியாமல் தவித்தார்.. எல்லாம் இந்த பொண்டாட்டியால் வந்த வினை ஏதோ இருபது நாள் வட இந்தியசுற்றுலா ஆன்மீக போறேன்னு சொல்லிட்டு. தன்னோட  தங்கச்சி குடும்பத்தோட‌போயிருக்கா...சாமி கூம்பிட போயிட்டா..இர்ணடாவது நாளே இப்படியா காய்ச்சல் வந்து படுத்தணும் 

நல்ல வேளையாக மகள் வந்தது நல்லதா போச்சு இல்லைன்னா என்னவாயிருக்கும்...

டாக்டர் நர்சிங் ஹோமில் வரவேற்பு அறை சுவரில் மிளிர்ந்தது.... ஓர் சிறு ஓவியம் 


அதில் வயதான ஓர் தாத்தாவை தாங்கிய படி நடந்து செல்லும் ஓர் இளம் பெண்.


கீழே ஓர் வாசகம்.... வயதான அப்பாவை குழந்தை போல் கவனிக்கும் மகள் வாழ்வின் வரம் 

ஏதோ சிந்தனையில் இருந்தவரை டாக்டரின் பேச்சு இந்த உலகத்திற்கு இழுத்து வந்தது..

வயதான தன் அப்பாவிற்கு வலிக்க கூடாதே என்று.. டாக்டர் அவருக்கு ஊசி வேண்டாம் டானிக் மாத்திரம் எழுதி கொடுங்க என்ற மகள்.. ரொம்ப தேங்க்ஸ் பாப்பா என்ற தகப்பன்... தாத்தா நான் ஊசி போட்டா வலிக்காது என்றவுடன் மீண்டும் விழித்த வயதானவர்.. மெல்லிய புன்னகையுடன் மெடிக்கல் ரசீது எழுதி கொடுத்தபடியே... நான் சும்மா சொன்னேன்.. நீங்க எந்த ஜென்மத்துல செஞ்சு புண்ணியமோ உங்களுக்கு மகளா வந்து பிறந்திருக்கா என்ற டாக்டர்


அப்பா நான் தான் சொன்னேனே இவங்க டாக்டர் விமலா என் கூட 12 வரைபடம் ஓண்ணா படிங்சவ... என்னோட பெஸ்ட் பிரண்ட் நான் எது சொன்னாலும் கேட்டுப்பாங்க 


அப்ப

.. அவரின் சட்டை பிடித்த இழுத்து.. அவருக்கு அடுத்து இருந்த ஓர் பத்து வயசு பாலகன்.


தாத்தா நீங்களும் என்னை மாதிரியே தான் போல தெரியுதே.


என்னடா சொல்லுறே எரிச்சல் கலந்த கண்டிப்பான குரலில் கேட்டார்..


தாத்தா சத்தமா பேசாதீங்க பிறகு நீங்க தைரியசாலின்னு நினைச்சு டாக்டர் ஊசிய குத்திட போறாரூ என்றே வயிற்றில் புளியை கரைத்தான்..


ஏதோ உங்க பொண்ணு வந்து சொன்னதால் நீங்க தப்பிச்சு இருக்கீங்க.. இந்த டாக்டர் யார் வந்தாலும் ஊசி தான் குத்துவாங்க அது இரண்டு ஊசியா என்று ஏதோ தினமும் நர்சிங் ஹோம் வந்து போவது போல் பேசினான்...

உனக்கு எப்படிடா இந்த விஷயமெல்லாம் தெரியும் என்றதும்.. இந்த நர்சிங் ஹோம் பத்தி எல்லாமும் எனக்கு தெரியும் என்றே வாய் சவடால் செய்தான்.


அது எப்படி தம்பி உனக்கு தெரியும் என அவர் கேட்ட போது டாக்டர் அவனை கூப்பிட்டார்...

டேய் ராகுல் எத்தனை தடவைகள் உன்கிட்ட சொல்லி இருக்கேன்..நோயாளி என்னை பார்க்க வந்தா அவங்க மத்தியில் நீயும் ஓர் நோயாளி மாதிரி வேஷம் போட்டுகிட்டு இருக்கே..


அம்மா.. என்னோட அருமை தாத்தா அதான் உன்னோட பாசக்கார அப்பா என்கிட்ட சொல்லிட்டு தானே இரண்டு வருஷம் மாமா வீட்டுக்கு போனார்..நீ நல்லா ஆஸ்பத்திரியை நடத்துறீயான்னு என்னை கவனிச்சுக்க சொல்லி இருக்காரே...


டாக்டர் அவனை அந்த தாத்தாவுக்கு அவரின் மகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.இவன் தான் என்னோட செல்ல பையன்... தாத்தா உங்களுக்கு ஓண்ணு தெரியுமா எங்க அம்மாவுக்கும் ஊசின்னா பயம் என்றதும் அனைவருமே சேர்ந்தே சிரித்தனர்.




தாத்தா நீங்க ரொம்பவே லக்கி 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...