784 - புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

எனது குலத்தில் நீ உதித்தாயா 

அல்லது உன் குலத்தில் நான் உதித்தேனா 

ஓன்றுமே புரியவில்லையே கண்ணா...

பரந்தாமன் நீ என்பதை அறிய இயலாத 

ஏழை பாமரன் நான்அன்றோ

மதுசூதனா....

பகவத் கீதையும் பாகவதம் படிக்கும் 

அறிவற்ற ஏழை குழந்தை நான்அன்றோ 

மாயக்கூத்தாடும் மோகினி வடிவான

நீ மாயவன் என்பதை அறியாமல் 

உன்னை தன்பசிக்கு வெண்ணெய் 

திருடச்சொன்ன முன்னோர்களின் 

பிழையை பொறுக்கொள் ஜெகன்நாதா..

உன்னை நித்தமும் காணவரும் 

பல்லாயிரக்கணக்கான பக்தர் கூட்டம் 

ஓர் ஓரமாய் நின்றபடி உன்னையே 

கதியென்று தாள் பணிகின்றேன். கிருஷ்ணா 

ராதைக்கும் மீராவுக்கும்..

குசேலனுக்கும் கர்ணனுக்கும் காட்சி தந்த 

கருணைகடலான கண்ணபரந்தாமா...

உன்னை போலவே உலகத்தை 

காத்திடவே கோவர்தனகிரியை தாங்கும் 

வல்லமையை எனக்கில்லை ...

ஆர்ப்பாட்டமக வாழ்ந்து விடவும் ஆசையில்லை..

அமைதியாய் நித்தமும் 

உன் நாமத்தை சொல்லுகின்ற 

வரத்தை கொடுத்துவிடு பெருமாளே ..

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே 

எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் என்றே 


No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...