எல்லோருமே வருகிறார்கள்
போகிறார்கள்... அவசரகதியில் அங்கே
வந்து செல்லும் மனிதர்கள் பலர்
வந்து செல்லும் அனைவருமே
அந்த கடவுளிடம் ஆயிரம்
கோரிக்கை வைத்துவிட்டு
வேகமாக விரைந்து செல்கின்றனர்
சிலர் வேலைக்கு சிலர் வீட்டிற்கு
அந்த கடவுளுக்கு காது கேட்டதா
என்பதை கூட அறிய விரும்பாமல்
பூசாரியின் கைகளில் கரன்சியை
அள்ளி அள்ளி திணித்தனர்..
கட்டிடத்தின் வாசலில் கிழிந்த
வேஷ்டியும் பல நாட்கள் குளிக்காத
மேனியுமாய் இருந்த அந்த பரதேசியை
யாருமே கண்டுகொள்ளவில்லை.
விலையுயர்ந்த வாகனத்தில் வந்திறங்கிய மிகப் பெரிய
பணக்கார வீட்டு பெண்மணி
போகாத கோவிலில் பார்க்காத
மருத்துவரில்லை பூசாரியின்
ஆறுதல் வார்த்தைகள் கேட்ட பின்னும்
நம்பிக்கையின்றியே காரில் ஏறியவள்
கார் அருகில் விரைந்து சென்ற அந்த
பரதேசி கவலைபடாதம்மா உனக்கு
சிங்க குட்டி மாதிரி ஓரு மகனும்
மானை மாதிரி அழகா ஓர் பெண் குழந்தையும் இருக்கும் இன்னும்
ஓரே ஓர் வருஷம் மட்டும் காத்திரு.
பிச்சைகார பயலே தள்ளிப்போடா
உன்னை மாதிரி எத்தனை பிச்சைக்காரனை பார்த்திருக்கிறேன்
போடா போடா பிச்சைக்கார நாயே
கோவிலுக்கு நம்பிக்கையோடு வந்தால்
பிச்சைகாரபயலே தள்ளிப்போடா
பரதேசி நாயே பிடித்து தள்ளினார் பாக்கெட்டில் கரன்சிகள் சிரித்தது...
புன்முறுவலோடு சொன்னார்...
கொஞ்ச தூரம் தள்ளிப் போனவுடன்
வலது பக்கத்தில் ரோடு திரும்பியவுடன் ஓர் பழக்கடை வரும் அந்த கடையை
தாண்டும் போது உன்னோட தம்பி
பேசுவான்.. ஆஸ்திரேலியா வேலையை விட்டு விட்டு அடுத்த மாதமே சென்னை
தொழில் தொடங்கபோவதாக...
குப்பையில் இருந்து எழுந்தவரின்
மீது ஓட்டிஇருந்த பக்தர்களின் எச்சில்
தட்டிவிட (not completed)...
ஏய் பாப்பா உனக்கு கண்டிப்பாக
நல்லதே நடக்கும்... தள்ளிப் போடா பிச்சைக்கார பரதேசி நாயே... தெருவோரத்தில்
சாமியும் கூட அமைதியாகவே
No comments:
Post a Comment