கவிதை தலைப்பு - கூலி
போலியான வார்த்தை ஜாலங்கள் பேசி விளம்பரங்களால்
தன்னை விற்பனை
செய்த தெரிந்தவன் பெறுகிறான்
பல கோடி கூலி.
ஆனால் மறுபக்கமோ
வியர்வை சிந்தி கடினமாக
உழைத்தும் சிறப்பாக
வேலை செய்தும் தான் செய்த வேலையை விளம்பரப்படுத்த
தெரியாத அப்பாவி வேலைக்காரன் போராடுகிறான்
தான் பெற வேண்டிய
நியாயமான கூலி..
நமக்கெல்லாம் கூலி
வேலை சரிவராது என்றே
நிலையான மாத சம்பளத்தை
பெற்றுக்கொண்டு
பல மனிதர்கள் ஏனோ சிலநேரங்களில் மனதில்
பயம் வருகிறது
வேலையை அதிகமாக
வாங்கும் முதலாளியிடம்
கேட்கவே முடியாது
சம்பள உயர்வு கூலி
No comments:
Post a Comment