சிறைச்சாலையில் இருக்கும் பலர்..
உணர்ச்சி வசப்பட்டு தன் நிலை மறந்து வருங்காலத்தை பற்றிய ஆழ்ந்த சிந்தனை செய்ய மனமின்றி தவறு செய்தவர்களே.
உலகில் உள்ள பல கோடி மக்களில் யாராவது ஓர் சிலர் அவர்களிடம் உண்மையான அன்பு செலுத்தியிருந்தால்
கற்பனையே சுகமாக தான் இருக்கிறது..
ஏனோ இந்த சமூகத்தில் பணமும் பதவியும் பட்டமும் அதிகார தோரணையும் தான் மதிக்கப்படுகிறது பாராட்டப்படுகிறது. ( அடுத்த வருடம் அந்த பதவிக்கு யார் வருகிறார்களோ அவர்களுக்கு தான் மரியாதை)
இந்த உண்மையை உணர்ந்து பதவியை வெறுத்து இயல்பாகவே வாழ நினைத்த மனிதருக்கு தானே வலிகள் புரியும்
இந்த போலியான வாழ்க்கையை வெறுத்து உண்மை அன்பு தேடிய மனிதரில் பலரை சமூகம் சிறைச்சாலையில் தான் தள்ளி விடுகிறது.(சிலர் மீது சுமத்தப்பட்டது உண்மையானதா போலியானதா என்பதே இன்னும் பலருக்கு புரியவில்லை)...
அவன்/ள் அவ்வளவு தான்..பணமில்லாவன் கிட்ட நமக்கென்ன பேச்சு என்றே புறந்தள்ளி விட்டது.
காலையில் இருந்து மாலை வரை உடனிருந்தவனுக்கு டீ கூட வாங்கி கொடுக்காதவனை கூட கேலியோ நணையாண்டியோ செய்யாமல்
வாழ்ந்த அப்பாவி மனிதர்கள் அவர்கள்
தன்னை ஏமாற்றியவரை தண்டிக்க இயலாமல், உலகின் செயல்படாடுகளில் இருந்து விலகியே வாழ்ந்தனர்
ஆயினும் சமூகத்தின் மீது அவர்கள் காட்டிய கோபத்தின் பிரதிபலிப்பே சண்டையும் சச்சரவும் தேவையற்ற வீண் வாத பிரதிவாமமுமே சிக்கலை உண்டாக்கியது
அவர்களின் உறவினரோ நண்பரோ பக்கத்து வீட்டு நபர்களில் யாராவது ஓர் உண்மையான அன்பை தந்திருந்தால் குற்றவாளியாக உருவாகி இருக்கமாட்டார்கள்.
நண்பர்களே நீங்கள் மட்டும் நல்லா இருக்கணும் என்று நினைக்காதீர்கள்.உங்களை சுற்றி இருப்பவரும் அவர்களின் குடும்பத்தாரும் கூட சிறப்பாக வாழ உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
ஏனெனில் ஓவ்வொரு கோபகாரின் மனதிலும் ஆற்ற முடியாத காய வடுக்கள் நிறையவே இருக்கிறது.
மனிதனை மனிதனாக மதித்து விட்டு ஆண்டவன் இருப்பதாக சொல்லும் இடத்தை தேடுங்கள்.
கடவுள் ஓவ்வொரு மனிதனின் மனதிலும் அன்பாய் இரக்கமாய், கள்ளமில்லாத குழந்தை மனம் உடையவனாக இருக்கிறான்.
மீண்டும் ஓர் முறை யோசித்து பாருங்கள் சிறைச்சாலைகள் ஏன் .. அவர்களும் மனிதர்கள் தான்.
பல மாபெரும் தலைவர்களை உருவாக்கியதும் அதே சிறைச்சாலைகள் தான்.
ஓர் வேளை அந்த முறை ஆட்சி செய்தவர்கள், அவர்களை சிறையில் அடைந்த காரணத்தால் காலம் அவர்கள் புடம் போட்டு தலைவராக மாற்றி விடுகிறது.
No comments:
Post a Comment