யாதவரின் செல்லப்பிள்ளை



அவனின் வரவிற்கு காத்திருந்தாள் ராதை...
சில பொழுது கழிந்த பிறகு.... 
புல்லாங்குழல் இசைத்தபடி.....
தனக்காக யாரும் காத்திருக்கவில்லை என்பது போல.. 
தனது மாடுகளை மேய்த்தவாறு வந்தான் அந்த மாயவன்.....
காட்சியை கண்டு கோபத்தில் அவளுக்கு
தோன்றியது ஓர் எண்ணம்....
ஏய் கபடதாரி... 
உனது ராதையிடமே நாடகமா.. 
உள்ளம் கவர்ந்த மாதவனே.........
என்னையா தவிக்க விட்டாயே.....
உன் தவிப்பை பார்க்க எனக்கும் ஆசைதான்...
ராதை மறைந்து நின்று வேடிக்கை பார்த்தாள்..
எதுவுமே தெரியாத அப்பாவி போல...
வந்தமர்ந்து புல்லாங்குழல் ஊதினான்......
யாதவரின் செல்லப்பிள்ளை...
சில நிமிடங்களில் தவித்துப் போய்...
அவன் அருகில் வந்து தோள்களில் 
சாயந்தவளின் கன்னங்களை விரல்களால்
வருடி விட்டபடி ......
"உன்னை காணாமல் என் கண்கள் 
எப்படி தவித்து போயின தெரியுமா". கேலி செய்தான்...
செல்லமாக சிணுங்கினாள்....
கோபத்துடன் கேட்டாள் அந்த கோதை பெண்...
கண்ணா என்னிடம் கூட ஏன் இத்தனை பொய்கள்.......
எல்லாம் அறிந்தும் அறியாதவன் போல்...
சிரித்தான்.... .
பகவத்கீதை சொன்ன குசேலனின் நண்பன்...

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...