யானை மரிக்கவில்லை

யானை எப்படி செத்துச்சு.
ஏதனால் தண்ணீரில் போய் 
ரொம்ப நேரம் நிக்குது என்றே
கேட்கும் கள்ளமில்லாத 
குட்டி குழந்தைகளுக்கு 
எப்படி சொல்வது
அவர்களின் முகத்தில் 
யானையின் பிரிவு
நினைத்து மெளனம் - அந்த யானை
தன்னை தானே
தனிமைப்படுத்தப்படுத்தி
கொண்டு யாரையும்
தொந்தரவு செய்யாமல்
தன் உயிர் விட்டது யானை
வயிற்றில் இருந்த குட்டியோடு
தன் வேதனை தன்னுள்
அடக்கி ஜலத்தில்
அடக்கமானது...இனியோரு
விதி செய்வோம்...
இயற்கை போற்றுவோம்
யானை மரிக்கவில்லை.
ஒற்றை கொம்பனும்..
இன்னும் பல யானைகளும்
உயிர் வாழ்கின்றன
எம் வீட்டின் குழந்தையின்
மனதில். பெரியவனாகி
யானைகளை காப்பாற்றுவேன்
என்று கண்கலங்கிய
சிறுவனின் மனதை
வென்று விட்டாயே
கர்ப்பிணித் தாயே... அல்ல
கர்ப்பிணி யானையே..

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...