விரல்களை தொடாமல்
விரக தாபம் தராமல்
நட்பும் நம்பிக்கையும் அன்புடனே
அபரிமிதமாக அள்ளித்தந்து
அமைதியின் உறைவிடமாய்
உடன்வந்த தேவதையே...
பெயரை கூடகேட்காமல்
நட்புடன் பேசினோமே
சில நிமிட சந்திப்பை
பல நாட்கள் சிந்தித்து
சிந்தையில் மகிழ்ந்தோமே
சிவன் கோயில் பிரகாரத்தின்
மாபெரும் விநாயகனை வணங்கியே
விடை பெற மனமின்றி...
என்னை பின்தொடர்ந்து
வந்த எனதருமை பைங்கிளியே
பலவருட நட்பையும் மறந்துவிடும்
கணிணி யுகத்தில்
கண்ணிமைக்கும் நேரம் போல்
சந்தித்த சந்திப்பை
சிலாகித்து பேசியவளே...
பணத்தை பற்றி
இருவருமே பேசவில்லை...
பாசத்தை தேடித்தானே
பாங்குடனே பரிதவித்து
நீண்ட நெடிய பயணம் வந்தாயோ
சொல்லடி எனதருமை மஞ்சள்தேவதையே
No comments:
Post a Comment