கடல்

கோபித்துக் கொண்டு
ஆவியாகி வானம்
சென்றது, அங்கும்
இருக்கப்பிடிக்காமல்
கண்ணீர் சிந்தியது
மழையாக
அணை போட்டாலும்
அங்கும் சிலநாள்
தங்கி விட்டு
ஆறாக பாய்ந்தது
அன்பை தேடி
பல ஊர்சுற்றி
விட்டு நமக்கு
சரியான இடம்
என தேடி ஓடி வந்து
மீண்டும்
அடைக்கலம் கேட்டது
ஆற்றின் குணம்
தெரிந்து அன்பால்
கட்டியணைத்து
தனதாக்கிக் கொண்டது
கடல்

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...