தொடங்கியதா காதல்

ஆறுதல் மொழி பகர்வதா...
பிறர் மனம் புண்படாத 
வண்ணம் எண்ணத்தில் கூட 
தன்னை தானே தண்டித்து 
மகிழ்வதா... மனதிற்குள் 
இருப்பதை யாரும் 
சொல்லாமல் தவிப்பதா...
மனதிற்குள் மருகியே
அன்பை தேடி வாழ்வதா...
சாதி மதம் கடந்ததா... வயதான 
அப்பனையும் ஆத்தாவையும் 
விட எதுவுமே பெரிதல்ல 
என்றே அவர்களுக்காக
தன்னலமற்று வாழ்வதா..
கட்டியணைப்பதா...
விரகதாபத்தில 
முத்தங்களை தேடுவதா...
வியர்வைகளின் 
பரிமாற்றமா... 
வேதனையை பிறருக்கு தருவதா 
அல்லது வேதனையை தன்னுள்ளே 
சுமந்தபடி குடும்பத்தின் 
உறுப்பினர்களின் உள்ளத்திலும் 
முகத்திலும் பாசத்தையும் 
நேசத்தையும் விதைப்பதா...
கடற்கரையில் கைகளை 
கோர்த்து நடப்பதா...
அடுத்த தலைமுறைக்கு 
சந்ததியின் தேடலா...
பாசமும் பாதுகாப்பான 
அப்பாவை போன்ற தேடலா..
காதலெனும் பெயரில் ஊர் சுற்றி.
கணவன் மனைவியாகி 
காய்கறி மளிகைக்கு 
மல்லுகட்டுவதா....
போகத்தின் தேடலா...
அல்லது எதையுமே 
எதிர்ப்பாராமல் தந்தையும் 
தாயும் போல் ஊரெல்லாம் 
ஆடம்பரத்தில் ஆர்ப்பரித்து 
ஆர்ப்பாட்டம் செய்த போதும்.
நம்ம தகுதி இவ்வளவு 
கிடைச்சதே பெரிது என்றபடி 
ஓவ்வொரு நாளும் நோய் 
நொடியற்ற நிம்மதியான 
வாழ்வே தந்த கடவுளுக்கு 
நன்றி சொல்லி கடந்தகால 
கவவைகளை புறந்தள்ளி 
எதிர்காலத்தை நினைத்து 
நிகழ்காலத்தில் உழைக்கும் 
இந்த சாதாரண மனிதனாக 
வாழ்வதா...அன்பை தேடி 
அலைந்து கோவிலில் 
நுழைந்ததும் கண்பட்டதே 
வார்த்தை அன்பே சிவம்..
ஓர் வேளை இறைவனை 
வணங்கவே இல்லறம் 
தொடங்கியதா காதல் 

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...